தூத்துக்குடியில், தாயை அடித்து துன்புறுத்தி தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு லயன்ஸ் டவுண் பகுதியைச் சேர்ந்தவர் நெஸ்டன் மனைவி மடோனா (40), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 7 அண்டுளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது, தாயார் ரோசிட்டா என்பவருடன் வசித்து வருகிறார். நேற்று காலை 9 மணியளவில் மடோனா தனது தாயாரை அடித்து துன்புறுத்தி வீட்டிற்குள் அடைத்து வைத்துக் கொண்டு, மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, அவரது தாயார் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து ஜன்னல் வழியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், மடோனா சமாதானம் அடையாமல் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்த போது, கதவை உடைத்தால் கேஸ் பற்ற வைத்து விடுவேன் என அப்பெண் கூறினார். பின்னர், தீயணைப்பு துறையினரின் சூட்சகமாக லாவகமாக தாய் – மகளை மீட்டனர்.
மேலும், மடோனாவை மனநல காப்பகத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.