கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத்தினருடனான, ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஜாமத் அமைப்புகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜமாத் அமைப்பினர் கூறும் போது, கோவை கார் வெடி விபத்திற்கு அனைத்து ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளோம்.
இதை வைத்து அரசியல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எந்த ஜமாத்திலும் இல்லை. வழக்கில் தொடர்புடையவர்கள் ஐடியாலஜியால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள், என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளவர்கள்.
என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளவர்கள் இந்த சம்பவத்தை எப்படி நிகழ்த்தினார்கள், என்.ஐ.ஏ உளவுத்துறை தோல்வியடைந்துள்ளது. இஸ்லாம் பயங்கரவாதத்தை ஒரு போதும் போதிப்பது இல்லை என கூறினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஏதும் தகவல்கள் இருந்தால் காவல்நிலையத்திற்க்கும் ,மாவட்ட நிர்வாகத்திற்க்கும் தகவல் அளிக்கும்படி ஜமாத்துகளுக்கு அறிவுறுத்திருக்கிறோம்.
முழு ஒத்துழைப்பைக் ஜமாத்துகள் வழங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஏரியா வாரியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். பாஜக அறிவித்த பந்த் தொடர்பாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை என கூறினார்.
தொட்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரைக் பொறுத்தவரைக்கும் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளது.
கூடுதலாக போலீஸார் ரோந்து பணியில் உள்ளார்கள், உளவுத்துறையை இன்னும் ground level பலபடுத்த திட்டமிட்டுள்ளோம். வழக்கு NIA வுக்கு மாற்றுவது குறித்து முறையான communication வந்ததும் அதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜமாத்துகள் மட்டுமல்ல அனைத்து மதத்தினருடன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும். கோவை தற்போது அமைதியாக உள்ளது. தேவைப்பட்டால் ஆர்ப்பாட்டம் , போரட்டத்திற்க்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.