கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால், தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மதுரைக்கிளையில், கடத்தப்பட்ட வேட்பாளர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வேட்பாளர் கடத்தப்பட்டதால், தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி மதுரைக்கிளையில், கடத்தப்பட்ட வேட்பாளர் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதியின் அடிப்படையில் இன்று பிற்பகல் நடைபெற இருந்தது.
தேர்தல் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சீலிட்ட கவரில் உயர் தாக்கல் செய்யவும், தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும், தேர்தல் முடிவுகள் வழக்கின் தீர்ப்புக்கு பின்னரே வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் மனுதாரர் திருவிகாவை தேர்தலுக்கு முன்பாக மர்ம நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பாக முறையீடு செய்து, தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரினர்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், `தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்படாது. நீதிமன்றம் வழியாகவே முடிவு வரும் என்பதால், இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கு 22 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், அன்று பார்த்துக் கொள்ளலாம்’ என தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட வேட்பாளர் திருவிக செய்தியாளர்களிடம் பேசும் போது, என்னை கடத்தியவர்கள் திமுகவினர்தான், மேலிடத்தில் இருந்து கும்பலில் ஒருவருக்கு செல்போன் கால் வந்தது. அவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
This website uses cookies.