திருச்சியில், தலைமை ஆசிரியர் கார் மீது துடைப்பம் விழுந்ததால் அரசுப் பள்ளி மாணவரை சரமாரியாக அடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அடுத்த பாப்பாபட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர் ஜெகன் (15) என்பவர், பள்ளி வளாகத்தின் மாடியில் உள்ள பள்ளி வகுப்பறையை தூய்மை செய்து உள்ளார்.
அப்பொழுது துடைப்பம் தவறுதலாக மாடியில் இருந்து, கீழ் பகுதியில் நின்று கொண்டு இருந்த பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரமோகன் காரின் மீது விழுந்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தலைமையாசிரியர், மாடியில் உள்ள வகுப்பறைக்குச் சென்று, யார் இதனைச் செய்தது எனக் கேட்டு விசாரித்து உள்ளார்.
அதற்கு, தவறுதலாக மாடியில் இருந்து கைதவறிக் கீழே போட்டதாக மாணவர் ஜெகன் கூறி உள்ளார். ஆனால், இதனைக் கேட்ட தலைமை ஆசிரியர், மாணவரை சரமாரியாக அடித்து உள்ளார். இதில் ஜெகனுக்கு கையில் எலும்பு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், உடலின் பல பாகங்களில் காயமும் ஏற்பட்டு உள்ளது.
பின்னர், இது குறித்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, பள்ளிக்கு வந்த பெற்றோர், அந்த மாணவரின் நிலையைக் கண்டு, அவரை தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்கு அவருக்கு கையில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்து உள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ராக்கெட் லாஞ்சர்.. திருச்சியில் மட்டும் கிடைப்பது ஏன்?
எனவே, மாணவரை முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மாணவர் மற்றும் அவரது பெற்றோர், பள்ளித் தலைமையாசிரியர் மீது தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
இந்தப் புகாரின் பேரில், தொட்டியம் காவல் ஆய்வாளர் கதிரேசன், தலைமை ஆசிரியர் சந்திரமோகனை விசாரித்து வருவதோடு, மாணவன் தூய்மைப் பணி செய்தது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.