கோவை – மதுக்கரை மஞ்சப்பள்ளம் ஆற்றில் நூற்றுக் கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, அறிவொளி நகர் பகுதியில் இருந்து மதுக்கரை, நாச்சிபாளையம் வழியாக கேரள மாநிலம் செல்லும் வழியில் மஞ்சப்பள்ளம் ஆறு அமைந்து உள்ளது. மழைக் காலங்களில் சுகுணாபுரம், சுந்தராபுரம், ஈச்சனாரி, மதுக்கரை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஆற்றில் கலக்கிறது. மேலும், இந்த ஆற்றின் பாதையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் நீர் தேங்கி இருப்பதால் கோடைக் காலத்திலும் நிலத்தடி நீராதாரமாகவும் உள்ளது.
மேலும் படிக்க: நீங்க பெண்களின் காவலரா..? எதிர்க்கட்சி தலைவராக அல்ல… ஒரு தந்தையாக கடுமையாக கண்டிக்கிறேன் ; திமுக மீது இபிஎஸ் ஆவேசம்!!
மேலும் இந்த நீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் குரும்பபாளையம் அருகே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுக்கரை அருகே செல்லும் ஆற்றுப் பாதை பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் நூற்றுக் கணக்கான மீன்கள் செத்து மிதந்தது தெரியவந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற் சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மஞ்சப்பள்ளம் ஆற்று நீர் வழிப் பாதையில் கலப்பதால் நீர்மாசு ஏற்பட்டு மீன்கள் இறந்து உள்ளன. எனவே, மதுக்கரை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இச்சம்பவம் மேலும் தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.