Categories: தமிழகம்

பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் : 20க்கும் மேற்பட்டவர்கள் கைது !!

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுத்தும் வகையில், பொது இடங்களில் மது அருந்தி கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மாலை நேரங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் இரவு நேரங்களில் ஒருசிலர் மது அருந்திவிட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் தகராறில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து இன்று இரவு காவல் கண்காணிப்பாளர் தீபிகா தலைமையில், ஒதியன்சாலை மற்றும் உருளையன்பேட்டை காவல்நிலைய போலீசார் கடற்கரை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பொது இடங்களில் மது அருந்திகொண்டிருந்த 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்ற மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே பொது இடங்களில் மது அருந்துவோர் யாராக இருப்பினும் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

KavinKumar

Recent Posts

IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…

39 minutes ago

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…

2 hours ago

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது.. “போலி போட்டோஷூட் அப்பா”வுக்கு பட்டியல் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…

2 hours ago

இனி தமிழ் மொழியை சொல்லி திமுக வியாபாரம் செய்ய முடியாது : ஹெச் ராஜா தாக்கு!

திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…

2 hours ago

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…

3 hours ago

ரஜினி கூட டான்ஸ்.. சகுனி வேலை பார்த்த நயன்தாரா : நடிகை வருத்தம்!!

சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…

3 hours ago

This website uses cookies.