போலீசாரின் சட்டையை பிடித்து மிரட்டல்.. PMK நிர்வாகிகள் அதிரடி கைது : பாமகவினர் மறியலால் பரபரப்பு.!!
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி,கீரனூர் பகுதியில் அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்று மாலை வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் பாமகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் போலீசார் தலையிட்டு சமாதான பேச்சு வார்த்தை செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோதிலிங்கம் மற்றும் அக்கட்சி சேர்ந்த நிர்வாகிகள் திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் பாலாஜி என்பவருடைய சட்டையை பிடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ‘பிரசார் பாரதி’ அல்ல.. பாஜகவின் பிரசார பாரதி : Doordarshan காவிமயமானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
இதனால் இன்று திருக்கோவிலூர் போலீசார் பாமக ஒன்றிய செயலாளர் ஜோதிலிங்கம். ஜெயராமன் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருவதால் கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க கோரியும் வலியுறுத்தியும் மாநில துணை செயலாளர் அன்பழகன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலசக்தி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.