கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளரிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக வார இதழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வருவாய்ப் பிரிவில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் தம்புராஜ் ஆர்.எஸ்,புரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறேன். ஜெய்சங்கர் என்பவர் கடந்த ஜனவரி 5ஆம்தேதி கோவை மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பம் அனுப்பி எனது தனிப்பட்ட சொத்துகள் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள் குறித்தும், எனது பணி பதிவேட்டின் விவரங்களைப் பார்வையிட அனுமதி கேட்டதன் பேரில் கோவை கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அனுமதி
பெற்று அதை புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து ஜெய்சங்கர் நடத்தி வரும் வார இதழில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டதால் என்னைக் குறித்து தவறான செய்தி வெளியிட்ட ஜெய்சங்கரை கடந்த ஜூன் 23ஆம் தேதி சந்தித்து ஏன் தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்து எனக் கேட்டேன்.
அதற்கு அவர் ரூ.10 லட்சம் கொடுத்தால் என்னை பற்றி செய்தி வெளியிடுவதை நிறுத்தி விடுவதாகக் கூறி மிரட்டினார். இது குறித்து காவல் துறையில் புகார் கொடுக்க கூடாது என கொலை மிரட்டலும் விடுத்தார்.
எனவே இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆர்.எஸ்.புரம் போலீஸார் ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.