Categories: தமிழகம்

கோவை மாநகராட்சி அதிகாரிக்கு ரூ.10 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் : வார இதழ் ஆசிரியர் கைது!!

கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளரிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக வார இதழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வருவாய்ப் பிரிவில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் தம்புராஜ் ஆர்.எஸ்,புரம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறேன். ஜெய்சங்கர் என்பவர் கடந்த ஜனவரி 5ஆம்தேதி கோவை மாநகராட்சி பொதுத் தகவல் அலுவலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பம் அனுப்பி எனது தனிப்பட்ட சொத்துகள் மற்றும் வேலைவாய்ப்பு விவரங்கள் குறித்தும், எனது பணி பதிவேட்டின் விவரங்களைப் பார்வையிட அனுமதி கேட்டதன் பேரில் கோவை கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அனுமதி
பெற்று அதை புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து ஜெய்சங்கர் நடத்தி வரும் வார இதழில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டதால் என்னைக் குறித்து தவறான செய்தி வெளியிட்ட ஜெய்சங்கரை கடந்த ஜூன் 23ஆம் தேதி சந்தித்து ஏன் தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்து எனக் கேட்டேன்.

அதற்கு அவர் ரூ.10 லட்சம் கொடுத்தால் என்னை பற்றி செய்தி வெளியிடுவதை நிறுத்தி விடுவதாகக் கூறி மிரட்டினார். இது குறித்து காவல் துறையில் புகார் கொடுக்க கூடாது என கொலை மிரட்டலும் விடுத்தார்.

எனவே இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஆர்.எஸ்.புரம் போலீஸார் ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

14 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

15 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

17 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

17 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

18 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

19 hours ago

This website uses cookies.