Categories: தமிழகம்

‘என்கிட்டயே காசு கேக்குறயா’…ஓசியில் பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்: திமுகவை சேர்ந்தவர் மீது போலீசில் புகார்..!!

சென்னை: உணவகத்தில் ஓசி பிரியாணி வாங்கி விட்டு திமுக பிரமுகர் எனக்கூறியவர் மீது ஹோட்டல் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

சென்னை அயனாவரம் மார்க்கெட் சாலை பகுதியை சேர்ந்தவர் நாகூர்கனி. இவர் அயனாவரம் யு.ஐ. நகரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களாக கே.கே நகரைச் சேர்ந்த சேகர் என்பவர் இந்த கடைக்கு சென்று, தான் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி பிரியாணி, பரோட்டாவை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நாகூர்கனி பணம் கேட்கும்போதெல்லாம் திமுக நிர்வாகியிடமே பணம் கேட்கிறாயா என்று மிரட்டல் விடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் துரித உணவகத்துக்கு சென்ற சேகர், பிரியாணி கேட்டுள்ளார். அதற்கு கடை உரிமையாளர் நாகூர்கனி பணம் கேட்டுள்ளார்.

அவரை சேகர் தகாத வார்த்தையால் திட்டியதோடு கடையை நடத்தவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதனால் பதற்றமடைந்த நாகூர்கனி இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக நிர்வாகியின் மீது நடவடிக்கை எடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, சேகர் வேறு ஒரு கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்துள்ளார். கட்சியில் பெரிய அளவில் எந்த பொறுப்பையும் அவர் வகிக்கவில்லை. நாகூர்கனி அளித்த புகார் குறித்து விசாரணை நடக்கிறது என தெரிவித்துள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

13 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

14 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

15 hours ago

தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

15 hours ago

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

16 hours ago

நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

17 hours ago

This website uses cookies.