தமிழகம்

‘தலித்தாக இருந்துகொண்டு புல்லட் ஓட்டுவியா?’ கையை வெட்டிய கும்பல்.. சிவகங்கையில் பரபரப்பு!

சிவகங்கையில், ‘தலித்தாக இருந்துகொண்டு புல்லட் ஓட்டுவியா?’ எனக் கேட்டு இளைஞரின் கையை வெட்டியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அடுத்த மேளக்காடாவர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமன் – செல்லம்மா தம்பதி. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு, அய்யாசாமி என்ற மகன் உள்ளார். இவர், சிவகங்கையில் உள்ள அரசுக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

மேலும், அய்யாசாமியின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்ததால், அவரின் தாய் செல்லம்மா, அய்யாசாமியின் சித்தப்பா பூமிநாதனை திருமணம் செய்து ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பூமிநாதன் கடந்த ஆண்டு புல்லட் வாகனத்தை வாங்கி உள்ளார். இதனையடுத்து, ஒரு முறை பூமிநாதனின் புல்லட் வாகனத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சேர்ந்து அடித்து உடைத்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பூமிநாதன், அய்யாசாமி இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று கல்லூரியை முடித்துவிட்டு, அய்யாசாமி புல்லட் வாகனத்தில் வேண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, மூன்று இளைஞர்கள் அவரை வழிமறித்து, பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ” எனக் கூறி, அய்யாசாமியின் கையை வெட்டி உள்ளனர்.

பின்னர், அங்கிருந்து ஓடி வந்த அய்யாசாமி, உடனடியாக பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்பின், அவருக்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அய்யாசாமிக்கு வெட்டப்பட்ட கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: தவெக நிர்வாகியின் தொல்லை.. 8ம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு!

இதனிடையே, அய்யாசாமியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர்கள், வீட்டை அடித்து உடைத்து சூறையாடியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிப்காட் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

7 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

7 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

8 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

9 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

10 hours ago

This website uses cookies.