தர்மபுரி அருகே சட்டவிரோதமாக கரு பரிசோதனை செய்த டிபார்ம் பட்டதாரி உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த வகுத்தானூர் கிராமத்தில் வசித்து வரும் சாக்கம்மாள் (52) என்பவரது வீட்டில் அரூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா சேஷசமூத்திரத்தை சேர்ந்த கவியரசன் (28), பள்ளத்தெருவை சேர்ந்த ஐயப்பன் (34) ஆகிய இருவரும் முறையாக மருத்துவம் படிக்காமல் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருப்பது ஆணா..? பெண்ணா..? என நவீன மொபைல் ஸ்கேன் கருவி கொண்டு சோதனை செய்து தெரிவித்தது தெரியவந்தது.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் புகாரின்படி அவர்கள் மூன்று பேர் மீதும் மொரப்பூர் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் ஸ்கேன் கருவியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்த விசாரணையில் கர்ப்பிணிகளை ஸ்கேன் செய்ய சாக்காம்மாள் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
கருவில் பாலினம் கண்டறிய ஒவ்வொருவரிடமும் 26 ஆயிரத்து 400 ரூபாய் வசூல் செய்துள்ளார். கவியரசன் டிபார்ம் படித்துவிட்டு மெடிக்கல் நடத்தி வந்துள்ளார். ஐயப்பன் ஏழாம் வகுப்பு படித்துவிட்டு கட்டிட வேலை செய்தது உள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.