Categories: தமிழகம்

பள்ளி மாணவர்கள் கடத்திய மூன்று பேர் கைது…! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!

திருவள்ளூர் : செங்குன்றம் அருகே காதல் விவகாரத்தில் தலையிட்ட பள்ளி மாணவர்களை ஆட்டோவில் கடத்திய மூன்று பேர் கைது செய்தனர்

செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பனுடைய மகன் ராகுல் (17) செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் பிரசாந்த் (18) ஆகியோர் செங்குன்றம் திருவள்ளூர் கூட்டு சாலை எம்ஜிஆர் சிலை அருகே நேற்று மாலை பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் இருவரையும் கடத்தி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து பிரசாந்த் தப்பி இறங்கிவந்து அங்கிருந்த போலீசார் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை செய்து செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் செல்லும்போது ஆட்டோவை வழிமறித்து பிடித்து தீவிர விசாரணை செய்தனர். அதில் புழல் லட்சமிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கிஷோர் (21), செங்குன்றம் தேவகி தெருவைச் சார்ந்த சச்சின் தீபக் (26) எம் ஏ நகரைச் சேர்ந்த சரண் (24) என தெரியவந்தது. இவர்களைக் கைதுசெய்து ஆட்டோவையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தியதில், கிஷோர் என்பவன் காதல் விவகாரத்தில் பாலியல் புகாரில் சிக்கிய வழக்கில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.

இந்நிலையில் கடத்தப்பட்ட பள்ளி மாணவன் ராகுல் கிஷோரின் காதல் விவகாரத்தில் தலையிட்டதால் அவரை நண்பருடன் சேர்ந்து கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

16 minutes ago

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

41 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

44 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

58 minutes ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…

அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…

3 hours ago

This website uses cookies.