தமிழகம்

பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் ஊதியம்.. இதென்னங்க புதுசா இருக்கு?

பீகாரில், பெண்களைக் கர்ப்பமாக்கினால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாட்னா: பீகாரின், நவாடா மாவட்டத்தில் உள்ள கஹுரா என்ற கிராமத்தில் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரும் முகநூல் பக்கத்தில், அகில இந்திய பிரக்னண்ட் வேலை வாய்ப்பு என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளனர். இதனையடுத்து, இந்த விளம்பரத்தைப் பார்த்து போன் செய்யும் நபர்களிடம் இந்த வேலைக்கு தங்களிடம் பதிவு செய்துகொள்ளுங்கள் எனக் கூறுகின்றனர்.

இதனை நம்புபவர்களுக்கு, அவர்களிடம் இருந்து ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் செல்பி எடுத்து அனுப்பி வைக்கும்படி கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பதிவுக்கட்டணம் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குகின்றனர். இவ்வாறு தங்களது மோசடி வலையில் சிக்கும் நபர்களிடம், குழந்தை இல்லாத பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், கர்ப்பமாக்கத் தவறினாலும் ரூ.50 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இது குறித்து துணை ஆணையர் இம்ரான் பர்வேஸ் கூறுகையில், “All India Pregnant Job Service மற்றும் பிளேபாய் சேவைகளை நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தக் கும்பல் தங்களிடம் சிக்குபவர்களிடம் ஹோட்டலில் அறை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு நம்பத்தகுந்த காரணங்களைச் சொல்லி பணம் வசூலித்து வந்தனர்.

அது மட்டுமல்லாமல், அவர்களை மிரட்டியும் பணம் சம்பாதித்துள்ளனர். இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் பிரின்ஸ் ராஜ், போலா குமார், ராகுல் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விரைவில் திரிஷா அமைச்சராகப் போகிறார்… மீண்டும் புயலை கிளப்பிய பிரபல நடிகர்!

மேலும், அவர்களிடம் இருது மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமே வாடிக்கையாளர்களுடன் சாட்டிங் செய்தது, பணப் பரிவர்த்தனை போன்ற விவரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

எல்லா படங்களும் விரும்பி நடிக்கல…ரகசியத்தை உடைத்த நடிகை ரேவதி.!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 80களிலும் 90களிலும் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதை கைப்பற்றியவர் நடிகை ரேவதி.தனது தனித்துவமான நடிப்பால்…

1 hour ago

தயவு செஞ்சு இந்த ஒரு பழக்கத்தை பழகாதீங்க…ஹரிஷ் ஜெயராஜ் வேண்டுகோள்.!

தமிழ் சினிமாவில் மெலடி பாடல்களை நினைத்தாலே முதலில் நினைவில் வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான். இதையும் படியுங்க: தமிழ் சினிமாவே…

2 hours ago

தமிழ் சினிமாவே இனி வேண்டாம்…மனம் உடைஞ்சு பேசிய நடிகை பாவனா..!

கம்பேக் கொடுக்கிறாரா பாவனா பொதுவாக,கோலிவுட்டில் தமிழ் பேசும் தமிழ் நடிகைகளை விட,தமிழ் பேசும் மலையாள நடிகைகள் அதிகமாக இருப்பது அனைவருக்கும்…

3 hours ago

திருப்பதியில் பக்தர்கள் இடையே மோதல்.. கோவை பக்தர் தாக்கியதால் கர்நாடக பக்தர் படுகாயம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயம்புத்தூரை சேர்ந்த கார்த்திகேயன் அவரது மகனுடன் திருமலைக்கு வந்தார். இதேபோன்று கர்நாடக…

3 hours ago

என் மானமே போச்சு.. தனிக்குடித்தனம் போன ஜோதிகாவால் சூர்யாவை திட்டிய சிவக்குமார்!

நடிகர் சூர்யா உடன் நடித்த நடிகை ஜோதிகாவை காதலித்து கரம்பிடித்தார். சூர்யா வீட்டில் எதிர்ப்பு என்ற பேச்சு எழுந்தாலும், இறுதியில்…

4 hours ago

என் உயிருக்கு ஆபத்து..விருதை திருப்பி கொடுக்கிறேன்…பிரபல இயக்குனர் ட்வீட்.!

பெரியார் விருதை ஏன் திருப்பி அளிக்கிறார்? இயக்குநர் கோபி நயினார் சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் சர்ச்சையை…

4 hours ago

This website uses cookies.