திருப்பூர் உடுமலைப்பேட்டை அருகே குளத்தில் பள்ளி மாணவி மற்றும் இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த குறிச்சிகோட்டையைச் சேர்ந்தவர் 16 வயது பள்ளி மாணவி. இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காணமல் போனயுள்ளார். எனவே, பெற்றோர் தரப்பில் தளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் புகாரின் பேரில், போலீசார் காணாமல் போன பள்ளி மாணவியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று குறிச்சிகோட்டை அடுத்த மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் மூன்று சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், குளத்தில் மிதந்த மூன்று சடலங்களையும் மீட்டனர். அப்போது, அதில் ஒரு சடலம் காணாமல் போன 16 வயது பள்ளி மாணவி என்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், மற்ற இரு சடலங்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஆகாஸ் (19) மற்றும் குறிச்சிகோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (20) ஆகியோரின் சடலங்கள் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர், மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ’இரண்டாவது டார்கெட் கமிஷனர் ஆபீஸ்’.. 8 பேரின் கூட்டுச் சதி.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்றபோது மூவரும் நிலை தடுமாறி குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், பல்வேறு கோணங்களில் அமராவதி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
’வருங்கால CM’ என தவெக பொதுச் செயலாளர் பெயரைக் குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டருக்கு புஸ்ஸி ஆனந்த், ECR சரவணன் விளக்கம்…
This website uses cookies.