தமிழகம்

8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. 3 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது!

கிருஷ்ணகிரியில் 8ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கருக்கலைப்பு செய்த வழக்கில் மூன்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவி ஒருவர் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், இந்த மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 8ஆம் வகுப்பு மாணவி, கர்ப்பமாகி அதனை கருக்கலைப்பும் செய்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியைச் சேர்ந்த சின்னச்சாமி, பிரகாஷ் மற்றும் ஆறுமுகம் ஆகிய மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களையும், உடனடியாக சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மூன்று ஆசிரியர்களும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், கைதான ஆசிரியர்களை தங்கள் முன் கொண்டுவர வேண்டும் என்றும் ஆவேசமாக பேசி வருகின்றனர். அதேபோல், பெற்றோர் தரப்பில், பாதிக்கப்பட்ட மாணவி தரப்பில் புகார் அளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பல்பு மாட்ட வந்த பாலமுருகன்.. அலறிய 78 வயது மூதாட்டி : மிரட்டி மிரட்டி வன்கொடுமை செய்த கொடூரம்!

அது மட்டுமல்லாமல், மாணவி கருவுற்று, கருக்கலைப்பு செய்த விஷயம்கூட அந்தப் பள்ளிக்குத் தெரியவில்லை என்றும், பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவி ஒரு மாதமாக பள்ளிக்கு வராததால், சந்தேகத்தின் பேரில் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் என்றும், அப்போதுதான் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கே இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

மாநிலங்களவையில் ஒலிக்கும் கமல்ஹாசன் குரல்.. தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…

32 minutes ago

தேன் எடுக்க வனப்பகுதிக்குள் சென்ற 20 வயது இளைஞர்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம் : விசாரணையில் ஷாக்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…

1 hour ago

விஷயம் தெரியாம பேசுறவங்க “Beep”… ஸ்ரீ விவகாரத்தில் அசிங்கமாக திட்டிய தயாரிப்பாளர்!

மனநலம் பாதிக்கப்பட்டதா?  “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…

2 hours ago

வெறும் ரீல்ஸ் தான் இந்த படமே.. 20 நிமிஷத்துக்கு மேல பாக்க முடியல : GBU படத்தை விமர்சித்த பிரபலம்!

விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…

2 hours ago

முடி காணிக்கை செலுத்திய துணை முதலமைச்சரின் மனைவி.. மகனுக்காக மொட்டை போட்டு வழிபாடு!

ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…

3 hours ago

STR 49 பட இசையமைப்பாளரை அறிவித்து புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிம்பு…

வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

3 hours ago

This website uses cookies.