புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (வயது 38).
இவர் தனது அண்ணன் மகன் சஞ்சய் (வயது 18), சஞ்சனா (வயது 16) ஆகியோரை திருப்புனவாசலில் இருந்து பள்ளி முடிந்து இளையராஜா அவரது இரண்டு சக்கர வாகனத்தில் சொந்த கிராமமான பறையத்தூர் அழைத்து சென்றார்.
அப்போது செல்லும் வழியில் மின்னல் தாக்கி அதே இடத்தில் மூவரும் இறந்தனர். அதில் இளையராஜா என்பவர் திருப்புனவாசலில் ஹோட்டல் நடத்தி வருகின்றார்.
அவரது அண்ணன் மகன் 12 ஆம் வகுப்பு அண்ணன் மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை மீட்டு திருப்புனவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர் அவர்கள் மூவரும் இறந்துவிட்டனர் என்று தகவல் அறிந்து அவர்கள் மூவர் உடலையும் மனமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து திருப்புனவாசல் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.