தமிழகம்

டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு.. இறந்தும் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

திருவள்ளூரில் டீ, பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜ கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணன் – அமுலு தம்பதி. இவர்கள் கூடை முடையும் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், 3 வயதுள்ள வெங்கடலட்சுமி என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்த குழந்தைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால், அவரை கண்ணும் கருத்துமாக பெற்றோர் பார்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில், குழந்தை நேற்று காலையில் தேநீர் உடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்டுள்ளார்.

அப்போது குழந்தைக்கு புரையேறி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிரமப்பட்டு உள்ளார். இதனையடுத்து, செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்று உள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த கவரைப்பேட்டை போலீசார், குழந்தையின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இது குறித்து குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “எனது குழந்தைக்கு டீ உடன் பிஸ்கட் கொடுத்தோம். அப்போது அவருக்கு புரையேறி மூச்சு வாங்கியது. உடனடியாக கவரைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போகச் சொன்னார்கள்.

இதையும் படிங்க: நீலகிரியில் தொடரும் டார்ச் லைட் சிகிச்சை.. என்ன சொல்கிறது அரசு?

ஆனால், நாங்கள் தாமதம் ஆகிவிடும் எனக் கருதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு, எனது குழந்தை உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். எனவே, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு பிரேதப் பரிசோதனை செய்ய முடியாது எனக் கூறிவிட்டனர்.

எனவே, இறுதியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு பிரேதப் பரிசோதனை நடைபெற்று குழந்தையைக் கொடுத்தனர்” எனத் தெரிவித்தார். இவ்வாறு டீ உடன் பிஸ்கட் சாப்பிட்ட குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

12 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

13 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

13 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

14 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

14 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

14 hours ago

This website uses cookies.