தமிழகம்

3 வயது சிறுமிக்கு நேரக்கூடாத கொடுமை.. கட்டிவைத்து செய்த செயல்!

ஹரியானாவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நுஹ்: ஹரியானா மாநிலம், நுஹ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 3 வயது சிறுமி. இவர் கடந்த நவம்பர் 30ஆம் தேதி மாலை, தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்து உள்ளார். ஆனால், மாலை நேரமாகியும் சிறுமி வீட்டுக்கு வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் தேடி உள்ளனர்.

ஆனால், எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், போலீசிடம் புகார் அளித்து உள்ளனர். பின்னர், இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர்.

பின்னர், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரேதப் பரிசோதனை முடிவில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. எனவே, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதையும் படிங்க: ’நான் குரு தான்டா பேசுறேன்’.. உருவ ஒற்றுமையால் அண்ணனை சிக்கவைத்த தம்பி.. கோர்ட்டையே அதிரவிட்ட சம்பவம்!

இந்த விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 34 வயது நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், அவர் திடீரென தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து, அந்நபரைக் கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டெல்லி – மும்பை விரைவுச் சாலையில் உள்ள மரோரா என்ற கிராமத்திற்கு அருகில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அந்த சிறுமியை கடத்தி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

அப்போது, அந்த சிறுமி அலறி துடித்ததால், சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

9 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

10 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

11 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

11 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

12 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

13 hours ago

This website uses cookies.