தூத்துக்குடியில் அஜித் ரசிகர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் வீரபாகு(45). ஆட்டோ டிரைவரான இவர் தீவிர அஜித் ரசிகர். நேற்று முன் தினம் தனது குடும்பத்தினருடன் தியேட்டருக்கு துணிவு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது, அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த பவுன்சர்கள் அவரை மட்டும் தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
அவருடன் வந்த குடும்பத்தினரை மட்டும் படம் பார்க்க அனுமதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வீரபாகு அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் துணிவு படம் பார்க்க வந்தவரை பவுன்சர்கள் உள்ளே அனுமதிக்காததால் மனமுடைந்த அஜித் ரசிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
This website uses cookies.