நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தான்இருப்பு பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டு சாராய விற்பனை படு ஜோராக விற்பனை நடைப்பெற்று வருகிறது.
மக்கள் வசிக்கும் இடம், வயல் வெளிகளில் வைத்து வியாபாரம் செய்வதால் வெளிப்பகுதிகளில் இருந்து ஆட்கள் வந்து செல்வதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடனே அப்பகுதியில் இருந்து வந்துள்ளனர்.
மேலும் அப்பகுதி ஆண்கள் காலை எழுந்த உடனே சாராயத்தை குடித்து விட்டு வேலைக்கு ஏதும் செல்லாமலே வயல் வெளிகளில் விழுந்து கிடந்தள்ளனர்.
இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காமல் சாராய வியாபாரிகளிடம் பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் இன்று ஒன்று திரண்டு செங்கல் சூலை பகுதியில் சாராயம் விற்றவர்களை அடித்து விரட்டி அவர்களிடமிருந்து கைப்பற்றிய சாராய மூட்டைகளை சாலைகளில் போட்டு உடைத்தனர்.
மேலும் சாராய வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.சாராயம் வியாபாரிகள் குறித்து பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பெண்களே சாராய வியாபாரிகளை அடித்து விரட்டி சாராய மூட்டைகளை சாலையில் போட்டு உடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.