திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், பேருந்து வருகைக்காக அமர்ந்திருந்த இடத்தில் பெண்கள் மீது கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றியதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், மற்ற பேருந்து நிலையங்களை இணைக்கும் இணைப்பு பேருந்துகளும், மாநகரின் பிற பகுதிகளுக்கு செல்வதற்கான நகரப் பேருந்துகளும் வந்து செல்கிறது. இதன் காரணமாக மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், பேருந்துக்காக செல்லும் பொதுமக்கள் அங்கிருக்கும் கடை வாயில்களில் அமர்வது வழக்கம். அந்த வகையில், பேருந்து வருவதற்காக கடை வாயிலில் பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி அவர்களை விரட்டியடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, கடைக்காரர்களே நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் பேருந்து வருகைக்காக பொதுமக்கள் அமரும் இடத்தில் தண்ணீர் ஊற்றி அநாகரீகமாக நடந்து கொள்வது வருத்தமளிப்பதாக உள்ளது, என தெரிவித்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.