திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
அதிலும், கார்த்திகை மாத விரதம் தொடங்கி உள்ளதால், பலரும் மாலை அணிவிப்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இந்த கோயிலில் யானை ஒன்றும் வளர்க்கப்படுகிறது. ‘தெய்வானை’ என்ற பெயர் கொண்ட இந்த யானை, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.
இந்நிலையில், இன்று (நவ.18) உணவு வழங்குவதற்காக பாகன் உதயகுமார் என்பவர் தெய்வானை யானை அருகே சென்று உள்ளார். அப்போது அவருடன், உதயகுமாரின் உறவினரான களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த சிசுபாலன் என்பவரும் இருந்து உள்ளார். அந்த நேரத்தில், இருவரையும் யானை பலமாக மிதித்ததாகத் தெரிகிறது.
இதில் இருவரும் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வந்து உள்ளனர். ஆனால், அதனிடையே சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். மேலும், படுகாயங்கள் உடன் கிடந்த உதயகுமாரை மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தவெக – அதிமுகவா? இது வேற.. புது ரூட் சொல்லும் சீமான்!
ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, யானை வளர்க்கும் இடத்தில் என்ன நடந்தது, இந்த உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.