தமிழகம்

திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து இருவர் உயிரிழப்பு!

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

அதிலும், கார்த்திகை மாத விரதம் தொடங்கி உள்ளதால், பலரும் மாலை அணிவிப்பதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இந்த கோயிலில் யானை ஒன்றும் வளர்க்கப்படுகிறது. ‘தெய்வானை’ என்ற பெயர் கொண்ட இந்த யானை, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது.

இந்நிலையில், இன்று (நவ.18) உணவு வழங்குவதற்காக பாகன் உதயகுமார் என்பவர் தெய்வானை யானை அருகே சென்று உள்ளார். அப்போது அவருடன், உதயகுமாரின் உறவினரான களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த சிசுபாலன் என்பவரும் இருந்து உள்ளார். அந்த நேரத்தில், இருவரையும் யானை பலமாக மிதித்ததாகத் தெரிகிறது.

இதில் இருவரும் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் வந்து உள்ளனர். ஆனால், அதனிடையே சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். மேலும், படுகாயங்கள் உடன் கிடந்த உதயகுமாரை மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படிங்க: தவெக – அதிமுகவா? இது வேற.. புது ரூட் சொல்லும் சீமான்!

ஆனால், அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த திருச்செந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, யானை வளர்க்கும் இடத்தில் என்ன நடந்தது, இந்த உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Hariharasudhan R

Recent Posts

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

34 minutes ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

1 hour ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

2 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

2 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

2 hours ago

திமுகதான் நம்பர் ஒன்.. அடித்துக் கூறும் அண்ணாமலை.. மறுக்கும் அமைச்சர்.. என்ன நடக்கிறது?

மத்திய, மாநில அரசுகளின் கடன் விவரங்களைக் குறிப்பிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அண்ணாமலை கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை:…

3 hours ago

This website uses cookies.