நள்ளிரவில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை… தட்டிக்கேட்டவரை மனைவி கண்முன்னே தாக்கி பார் ஊழியர்கள் ; ஷாக் சம்பவம்!!
திருப்பூர் அருகே இரவு 10 மணிக்கு மேல் விற்ற மது விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், பார் ஊழியர்கள் மனைவி கண் முன்னே கணவனை தாக்கியதாக, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் – முதலிபாளையம் சிட்கோவில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு 10 மணிக்கு மேல் மனைவியுடன் வந்த நபர் ஒருவர், மனைவியை வெளியே நிறுத்தி விட்டு, டாஸ்மாக் பார் முன்பாக உள்ள பெட்டிகடையில் சட்டவிரோத மது விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தில் மது வாங்க சென்றதாக தெரிகிறது.
அப்போது, விற்பனை செய்யப்படும் மதுவின் விலை குறித்து அந்த நபருக்கும், பார் ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. சத்தம் கேட்டு கணவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல வந்த மனைவி கண் முன்னே, டாஸ்மாக் ஊழியர்கள் அந்த நபரை தாக்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் மது வாங்க வந்ததாக கூறப்படும் நபரை மனைவி கண் முன்னே பார் ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி…
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில்…
This website uses cookies.