திருப்பூர் அருகே பசுக் கன்றை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் பகுதி கூனம்புத்தூரை சேர்ந்தவர் விவசாயி துரைசாமி வயது 71. இவர் அப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சுமார் இரவு 7:30 மணியளவில் துரைசாமி வீட்டின் பின்புறம் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.
சுமார் 8 மணி அளவில் வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த பசு கன்று குட்டி கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளார். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட்டை வைத்து கன்று குட்டியை தேடி உள்ளார். வழக்கமாக கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்து கன்று காணாமல் போயிருந்ததை கண்டு, வீடு மற்றும் வீட்டின் பின்புற பகுதியில் தேடி உள்ளார்.
அப்பொழுது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பசு கன்று குட்டியை இழுத்துச் சென்று அதை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனை கண்ட துரைசாமி சத்தம் போட்டு உள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரைக் கொண்டு பசுக் கன்று குட்டியை பரிசோதித்ததில் அது பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இதுபோன்று குற்ற செயல்கள் நடப்பது இன்றுடன் மூன்றாவது முறை என்றும் பசுவின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஊதியூர் காவல் நிலையத்தில் கன்று குட்டியின் உரிமையாளர் துரைசாமி, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே பசுக் கன்றுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.