திருப்பூர் அருகே பசுக் கன்றை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் பகுதி கூனம்புத்தூரை சேர்ந்தவர் விவசாயி துரைசாமி வயது 71. இவர் அப்பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 20ஆம் தேதி சுமார் இரவு 7:30 மணியளவில் துரைசாமி வீட்டின் பின்புறம் குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது மின்சாரம் தடைபட்டுள்ளது.
சுமார் 8 மணி அளவில் வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த பசு கன்று குட்டி கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளார். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட்டை வைத்து கன்று குட்டியை தேடி உள்ளார். வழக்கமாக கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்து கன்று காணாமல் போயிருந்ததை கண்டு, வீடு மற்றும் வீட்டின் பின்புற பகுதியில் தேடி உள்ளார்.
அப்பொழுது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பசு கன்று குட்டியை இழுத்துச் சென்று அதை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனை கண்ட துரைசாமி சத்தம் போட்டு உள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரைக் கொண்டு பசுக் கன்று குட்டியை பரிசோதித்ததில் அது பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் இதுபோன்று குற்ற செயல்கள் நடப்பது இன்றுடன் மூன்றாவது முறை என்றும் பசுவின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஊதியூர் காவல் நிலையத்தில் கன்று குட்டியின் உரிமையாளர் துரைசாமி, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது புகார் அளித்துள்ளார். இவர் அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே பசுக் கன்றுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.