அரசு பேருந்தில் பெண்ணிடம் பணப்பையை திருட முயன்ற பெண்களின் பையை சோதனையிட்ட போது, பண்டல் பண்டல்களாக பணம் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர் நஞ்சப்பாநகர் பகுதியை சேர்ந்த வானதி. பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தில் போயம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தார். அந்த பேருந்து பாண்டியன்நகர் அருகே வந்த போது, அதே பேருந்தில் பயணித்த 2 பெண்கள் வானதியின் பணப்பையை திருட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வானதி சக பயணிகள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பாண்டியன்நகர் போலீஸ் சோதனைச்சாவடியில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தார்.
சோதனை சாவடியில் போலீசார், அந்த பெண்கள் வைத்திருந்த பையை சோதனை இட்டபோது, அதில் சிறிய சிறிய பண்டல்களாக பணம் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்களை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் இருவரும் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உஷா (53), மஞ்சு (45) என்பது தெரிய வந்தது. மேலும் இருவரும் வானதியிடம் பணப்பையை திருட முயன்றதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து நல்லூரில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.