ஒரு நாள் மழையால் 2 அடி பள்ளமான போக்குவரத்து நிறைந்த சாலையில் உள்ள குழியால் விபத்துக்கள் நிகழ்வதால் தரமான சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட 31 வார்டு ஒம் சக்தி கோயில் வீதியில் கடந்த சில மாதங்கள் முன்பு புதிய தார் சாலை அமைத்தனர். தொடர்ந்து, மக்கள் பயன்பாட்டில் இருந்த சாலை கடந்த இரண்டு நாட்கள் முன்பு திருப்பூர் மாவட்டத்தில் 17 செ.மீ மழை பெய்தது. அதுவும் தமிழகத்தில் அன்று திருப்பூரில் தான் அதிக மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மழையில் கொங்கு மெயின் ரோடு, எஸ்.வி.காலனி, எம்.எஸ் நகர், திருநீலகண்டபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொழிந்த மழை நீர் அனைத்தும் இந்த சாலை வழியாக சென்று யூனியன் மில் சாலை அருகில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. அதிக நீர் வந்ததால் சில மாதங்கள் முன்பு போடப்பட்ட தார் சாலை சுமார் 300 அடி தூரம் பெயர்ந்துள்ளது. சில இடங்களில் சுமார் 2 அடி ஆழ பள்ளம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்படுவதாகவும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் சாலையை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். மேலும், சாலையை உடனடியாக தரமாக அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.