திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள், ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதன் ஒருபகுதியாக, திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டமானது தலைவர் சாந்தாமணி தலைமையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பெண்கள், தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்ட தொகையான ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், ஊராட்சி நிர்வாகம் அதற்கு சரியான நடவடிக்கை இல்லை என கூறி ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நடைமுறை சிக்கலினால் தாமதமாகி வருவதாகவும், கூடிய விரைவில் சரி செய்யப்பட்டு அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதனால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது அமரன். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு எகிறியது. படமும் 100…
ICC விதிமுறையை மீறிய கோலி இந்திய வீரர்களில் சச்சினுக்கு அடுத்தபடியாக தன்னுடைய திறமையால் பல சாதனைகளை நிகழ்த்தி வருபவர் விராட்கோலி,சமீப…
கோவை பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தேவ் தர்சன் ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை,…
This website uses cookies.