திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள், ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தி்ல் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. இதன் ஒருபகுதியாக, திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டமானது தலைவர் சாந்தாமணி தலைமையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பெண்கள், தமிழக அரசின் மகளிர் உரிமைத் திட்ட தொகையான ஆயிரம் ரூபாய் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், ஊராட்சி நிர்வாகம் அதற்கு சரியான நடவடிக்கை இல்லை என கூறி ஊராட்சி தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பேசிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேலுச்சாமி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், நடைமுறை சிக்கலினால் தாமதமாகி வருவதாகவும், கூடிய விரைவில் சரி செய்யப்பட்டு அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இதனால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.