திருப்பூர் மாவட்டத்தில் ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 6வது நாளாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், கற்கள் விற்பனையும் முற்றிலும் நிறுத்தப்படுவதால் கட்டுமான பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கல் குவாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்திற்கு சமூக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காங்கேயம் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஹாலோ பிளாக் கூடங்கள் மூடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாக 1 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரையிலும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட கூடும் என தெரிவித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.