திருப்பூர் அருகே, கஞ்சா ஆசாமிகள் பெண்ணிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. கணவர் இறந்த நிலையில், அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பாரதிபுரம் பகுதியை சேர்ந்த சின்ன சூர்யா மற்றும் பெரிய சூர்யா என்ற இருவரும் அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமுல் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கஞ்சா போதையில் கிருஷ்ணவேணி கடைக்கு சென்ற சின்ன சூர்யா மற்றும் பெரிய சூர்யா இருவரும் பணம் கேட்டுள்ளனர். கிருஷ்ணவேணி பணம் தர மறுத்தாகவும், இதில் ஆத்திரமடைந்த இருவரும் கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் பேசி, கடையில் இருந்த பாட்டில்களை உடைத்தும், கிருஷ்ணவேணியை கீழே தள்ளியும் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கஞ்சா போதையில் மாமூல் கேட்டு பெண்ணிடம் தகராறில் ஈடுபடும் வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மங்கலம் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.