திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில், கௌதம் ராஜ் என்பவர் 1.59 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
அந்த நிலத்திற்கு செல்லும் 12 அடி பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அந்தப் பாதையை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனடிப்படையில், வட்டாட்சியர் பானுமதி தலைமையில், போலீசார் பாதுகாப்புடன் மீட்புப் பணி நடைபெற்றது. அப்போது வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பி வேலி போடப்பட்டிருந்தது. வீரக்குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவர் வரும் வரை அளவீடு செய்யக்கூடாதெனவும் அவரது உறவினர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த உறவினர் கனகராஜை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் பூச்சி மருந்தை அருந்த முயன்ற செல்வராணியையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனிடையே டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, ஜேசிபி இயந்திரம் மூலம் பாதையை மீட்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து வீரக்குமார் நிலத்தை அளவீடு செய்ய அவர்கள் நிபந்தனையின் படி 5 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.