திருப்பூர் அருகே முதலிபாளையம் பகுதியில் வீட்டில் தங்கி இருந்த இரண்டு வட மாநில தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் கிராமம் உட்பட்ட சிட்கோ செந்தில் நகர் பகுதியில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்த்த கமலேஷ் (24) சச்சின் ராம்.(22) ஆகிய இருவரும் நண்பர்கள் வாடகைக்கு வீட்டில் வசித்து கொண்டு, இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.
வட மாநில தொழிலாளியான இவர்கள் கமலேஷ் என்பவர் தனது ஈரதுணி காய வைப்பதற்காக அருகிலுள்ள கம்பியின் மீது துணியை போட்டுள்ளர். அதில் மின்சாரம் இருந்ததால் எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த நண்பர் சச்சின் ராம் என்பவர் மின்சாரம் தாக்கிய நண்பரை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
இருவரது அலறல் சத்தம் கேட்டதை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.
இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.