பல்லடம் அருகே ஜூசுக்கு பணம் கேட்ட கடை ஊழியரை காவலர் கன்னத்தில் அறைந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரட்டு மடம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்லடம் அருகே சின்னக்கரையில் ஜூஸ் கடை வைத்துள்ளார். இன்று பிற்பகல் 12 மணி அளவில் சுரேஷ் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சின்னக்கரை சோதனை சாவடியில் பணிபுரிந்து வரும் பல்லடம் காவல் நிலைய தலைமை காவலர் பாண்டியன் என்பவர் ஜூஸ் வேண்டும் என கேட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் வாங்கிய ஜூஸுக்கு இன்னும் பணம் வரவில்லை என சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த காவலர் பாண்டியன் சுரேஷை தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் காவலர் பாண்டியனை தடுத்து அனுப்பி வைத்துள்ளனர். காவலர் பாண்டியன் தாக்கியதில் சுரேஷ் படுகாயம் அடைந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவலர் பாண்டியன் ஜூஸ் கடை சுரேஷை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே. இந்த கடையில் தலைமை காவலர் பாண்டியன் பணம் தராமல் ஜூஸ் குடித்து வந்ததால் பிரச்சனையானதாகவும் கூறப்படுகிறது. ஜூஸுக்கு காசு கேட்டதற்காக கடைக்காரரை தாக்கிய காவலர் பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. சசாங் சாய் உத்தரவிட்டார்.
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
This website uses cookies.