திருப்பூர் அருகே கோவில் பூசாரி தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (72). இவரது மனைவி பார்வதி (65). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சுப்பிரமணி அப்பகுதியில் உள்ள கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை இவரது மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்த போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தவர், கோவிலின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அங்கு சுப்பிரமணி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, முன்விரோதம் காரணமாக சுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா..? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.