திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடை பயிற்சி சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக பிரமுகர் பார்த்திபன். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விளையாட்டு திடல் அருகே பார்த்திபன் காலை சுமார் 5.30 மணியளவில் நடைபயிற்சிக்கு சென்றிருந்தார்.
அவரை இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக முகம் மற்றும் தலைப்பகுதிகளில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து, செங்குன்றம் போலீசார் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், சம்பவ இடத்தில் ஆவடி இணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு, முன்விரோதம் காரணமாக அவரை வெட்டி கொலை செய்தனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் மீது ஆந்திர மாநிலத்தில் சர்வதேச செம்மர கடத்தல் வழக்கும், கடப்பா உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ள நிலையில், இவரை முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தனரா..? அல்லது அரசியல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்குன்றம் பகுதியில் நடை பயிற்சியின் போது, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் நடை பயிற்சியின் போது கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை போலீசார் வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.