திருவள்ளூர் அருகே திமுக ஒன்றிய கழக செயலாளர் மகன் கஞ்சா மது போதையில்
இரும்பு கம்பியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய கழகச் செயலாளரான சக்திவேல். இவரது மகன் விஷால் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் காரணமாக கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அருகில் உள்ள அவரது பெரியப்பா மறைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு என்பவர் வீட்டில் அவரது மனைவி செல்வி, மகன் முருகன், மருமகள் ரம்யா, பேரன் கருணாநிதி ஆகியோருடன் இருந்தபோது, ஏற்கனவே இருந்த குடும்ப பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இரும்பு கம்பியை கொண்டு நால்வரையும் விஷால் தாக்கியதில் படுகாயம் அடைந்த நிலையில், ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். இரத்த வெள்ளத்தில் இருந்த மூவரையும் பொதுமக்கள் மீட்டு வேல்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இரும்பு கம்பியால் தாக்கி ரம்யாவை கொன்றுவிட்டு தப்பியோடிய தனியார் கல்லூரி மாணவன் திமுக ஒன்றிய கழக செயலாளர் மகனை பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.