ஓட்டுனர்கள் இருவருக்குள் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன் விரோதத்தில் நண்பனை சவுடுமண் குவாரியில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரகாஷ். கிருஷ்ணராஜ கண்டிகை கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சூர்யா இருவரும் நண்பர்கள். பிரகாஷின் நகையை வைத்து சூர்யாவிற்கு பணம் கொடுத்ததில் கொடுக்கல், வாங்கலில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் அக்கரம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடு மண் ஏற்ற பிரகாஷ் வந்த நிலையில். பில் போடும் கொட்டகை அருகில் மறைத்து வைத்திருந்த கத்தியால் லாரி ஓட்டுநர் சூர்யா, அவரது நண்பன் பிரகாசை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரியில் தப்பி ஓட முயன்ற சூர்யாவை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டபோது லாரியை நிறுத்திவிட்டு ஓட்டம் எடுத்தார். தகவல் அறிந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் பிரகாஷ் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு உடற்கூராய் விற்கு உடலை மீட்டு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சூர்யா தனது நண்பர் பிரகாசை கஞ்சா போதையில் வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.