திருவள்ளூர் அருகே போதையில் தம்பியை லாரியை ஏற்றி கொலை செய்த வழக்கில் அண்ணன் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 21 ம் தேதி புழல் அம்பத்தூர் சாலையில் தனியார் பள்ளி அருகே வட மாநில லாரி ஒன்று சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதில் இரண்டு ஓட்டுனர்கள் இருந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், ஆத்திரப்பட்ட மற்றொரு ஓட்டுநர் திடீரென லாரியை இயக்கி முன்னாள் நின்று கொண்டிருந்த மற்றொரு டிரைவரின் மீது லாரியை ஏற்றினார். இதில் சம்பவ இடத்திலேயே, அவர் உடல் நசுங்கி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து, இறந்த லாரி ஓட்டுனர் புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 2வது தெருவை சேர்ந்த சேர்ந்த சீனிவாசன் (50) என்பவரின் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை ஏற்றி கொலை செய்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த வழக்கில் கொலையாளியை உடனே பிடிக்க கொளத்தூர் துணை ஆணையாளர் ராஜாராம் குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் புழல் சரக உதவி கமிஷனர் ஆதிமூலம் தலைமையில், இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் தப்பி ஓடிய டிரைவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், புழல் பகுதியில் சுற்றி திரிந்த திருச்சி, திருவெறும்பூர் காட்டூரை சேர்ந்த லாரி ஓட்டுனர் பிச்சையப்பா (58) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், லாரி ஏற்றி கொல்லப்பட்ட சீனிவாசன் தம்பி என்பதும், இருவரும் மதுபோதையில் இருந்தபோது வாய்த்தகராறு ஏற்பட்டதில், கொலையில் முடிந்ததாக தெரியவந்தது. பின்னர், பிச்சையப்பாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.