Categories: தமிழகம்

டிராக்டர் மீது கார் மோதி விபத்தில் மகன், மகள் பலி ; கணவன், மனைவிக்கு கால்முறிவு… பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பிய போது சோகம்!!

சோழவரம் அருகே பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்பி வரும் வழியில் நிகழ்ந்த விபத்தில் தனியார் நிறுவன உரிமையாளரின் மகன் மற்றும் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மீஞ்சூர் வண்டலூர் சாலையில் தனது புதிய டாட்டா சபாரி காரில் பொங்கல் விழாவிற்காக பழனிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு மீண்டும் மீஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது, முன்னாள் சென்ற டிராக்டரை இடித்ததன் காரணமாக தலைக்குப்புற கவிழ்ந்த காரில் இருந்த கணவன், மனைவிக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. அவரது மகள் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். மகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் இழுந்தார்

மீஞ்சூரில் வேலவன் ஏஜென்சி என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் சண்முகம் (42), மகேஸ்வரி (36). இவர்களுக்கு வர்ஷா (19) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்புக்கு படித்துக் கொண்டிருக்கிறார். மகன் வர்ணிஷ் (15) கவரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

மகேஸ்வரிதான் காரை ஓட்டுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் புதிய டாட்டா சபாரி கார் வாங்கியதாக தெரிகிறது. அதில் இவர்கள் பொங்கல் அன்று பொங்கலை கொண்டாடிவிட்டு பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக மீஞ்சூரில் இருந்து தங்களின் காரில் சென்றதாக தெரிகிறது.

வரும் வழியில் சொந்த ஊருக்கு சென்று விட்டு இவர்கள் மீஞ்சூரை நோக்கி வரும்பொழுது, மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, முன்னாள் சென்ற டிராக்டரை சரியான முறையில் கவனிக்காத காரணத்தால், அதன் பின்னால் கார் இடித்ததாக தெரிகிறது.

உடனடியாக கார் பலமுறை தலைகுப்புற விழுந்த நிலையில், டிராக்டர் வேறொரு திசையில் விழுந்துள்ளது. இதில், டிராக்டர் டிரைவருக்கு காயங்கள் ஏற்பட்டதால், அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காரை ஓட்டிய மகேஸ்வரிக்கும், கணவருக்கும் கை கால்களில் காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் முதலில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் விபத்தில் சண்முகத்தின் மகன் மற்றும் மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் மீஞ்சூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…

27 minutes ago

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

1 hour ago

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…

2 hours ago

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

4 hours ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

4 hours ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

4 hours ago

This website uses cookies.