திருவள்ளூர் ; பொன்னேரியில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ரவுடியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அப்புன் என்கிற அப்புன்ராஜ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், அங்குள்ள சில ரவுடிகளுக்கும், யார் பெரியவர் என்கிற மோதலில் அப்புன் ராஜ் இரு சக்கர வாகனத்தில் வந்த போது, அவரை வழிமறித்து நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தலை மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் அரிவாளால் வெட்டிவிட்டு ரவுடி கும்பல் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
சம்பவ இடத்தில் வீட்டின் அருகே இருந்த அப்புன்ராஜின் மனைவி நதியா பார்த்தபோது, ரவுடிகள் பாலாஜி, கார்த்திக், லோகேஷ், ஜெய் ஆகிய நான்கு பேரும் தப்பி ஓடியதாக அவர் தெரிவித்த தகவலின் பேரில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
This website uses cookies.