சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு கச்சா எண்ணெய் படலம் பரவிய நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணூர் உப்பங் கழி கடற்கரை பக்கிம்கம் கால்வாய் பகுதிகளில் கலந்த தொழிற்சாலை கழிவுகள் கச்சா எண்ணெய் கழிவு கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அது மெல்ல பரவி பழவேற்காடு கோரை குப்பம் முதல் வைரவன் குப்பம் வரை கடற்கரை ஓரங்களில் பரவி உள்ளது.
இதனால் மீன்பிடி படகுகள் வலைகள் சேதம் அடையும் நிலை உள்ளதால், மீனவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் சில மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்கிறது.
புயல் கனமழை காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டு மீன் பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் படலம் பரவி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்ததார்.
அவரிடம் எண்ணெய் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
This website uses cookies.