சென்னை எண்ணூரில் இருந்து பழவேற்காட்டிற்கு கச்சா எண்ணெய் படலம் பரவிய நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எண்ணூர் உப்பங் கழி கடற்கரை பக்கிம்கம் கால்வாய் பகுதிகளில் கலந்த தொழிற்சாலை கழிவுகள் கச்சா எண்ணெய் கழிவு கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அது மெல்ல பரவி பழவேற்காடு கோரை குப்பம் முதல் வைரவன் குப்பம் வரை கடற்கரை ஓரங்களில் பரவி உள்ளது.
இதனால் மீன்பிடி படகுகள் வலைகள் சேதம் அடையும் நிலை உள்ளதால், மீனவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் சில மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்கிறது.
புயல் கனமழை காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டு மீன் பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் படலம் பரவி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்ததார்.
அவரிடம் எண்ணெய் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.