தமிழகம்

சலூன் கடை ஊழியர் மீது விசிக நிர்வாகி கொலைவெறி தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!

திருவண்ணாமலையில் சலூன் கடை ஊழியர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய விசிக நிர்வாகி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் சாலையில் உள்ள வேங்கிக்கால் என்னும் கிராமத்தில் சலூன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் வேலை பார்த்து வந்த அஜித் மற்றும் சக ஊழியர் இருவரும், நேற்றைய முன்தினம் (டிச.17) இரவு பணி முடித்துவிட்டு, தங்களது இருசக்கர வாகனத்தில் கடையில் இருந்து புறப்பட்டு உள்ளனர்.

அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் ஓட்டுநர், கவனக் குறைவாக பின்னோக்கி வந்ததில், இருவர் வந்த பைக் மீது மோதியுள்ளது. இதனால் பைக்கில் வந்த சலூன் கடை ஊழியர்களுக்கும். காரில் இருந்த திருவண்ணாமலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர பொறுப்பாளரான ஆர்.கே.அருண்குமாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விசிக நிர்வாகி அருண்குமார் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனையடுத்து, அருண்குமார் தனது கடைக்குள் புகுந்துள்ளார். ஆனாலும் விடாத அவர்கள், சலூன் கடைக்குள் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து காரில் தப்பித்து உள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சலூன் கடையின் உரிமையாளர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில், திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார், சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதையும் படிங்க: RED LIGHT AREA போல் மாறிய அடுக்குமாடி குடியிருப்பு.. ரகசிய சோதனையில் பகீர்!

இதன்படி, அருண்குமாரின் செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சீட்டம்பட்டு என்னும் கிராமத்தில் மறைந்திருப்பதாக தெரிய வந்து உள்ளது. பின்னர், உடனடியாக அங்கு சென்ற தனிப்படை போலீசார், அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளியான நாகராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாரி மற்றும் மணி ஆகியோரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இவர்கள் தப்பிப்பதற்காக பல்வேறு விதங்களில் உதவிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

7 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

8 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

8 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

10 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

10 hours ago

This website uses cookies.