தமிழகம்

சலூன் கடை ஊழியர் மீது விசிக நிர்வாகி கொலைவெறி தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!

திருவண்ணாமலையில் சலூன் கடை ஊழியர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய விசிக நிர்வாகி உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் சாலையில் உள்ள வேங்கிக்கால் என்னும் கிராமத்தில் சலூன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் வேலை பார்த்து வந்த அஜித் மற்றும் சக ஊழியர் இருவரும், நேற்றைய முன்தினம் (டிச.17) இரவு பணி முடித்துவிட்டு, தங்களது இருசக்கர வாகனத்தில் கடையில் இருந்து புறப்பட்டு உள்ளனர்.

அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் ஓட்டுநர், கவனக் குறைவாக பின்னோக்கி வந்ததில், இருவர் வந்த பைக் மீது மோதியுள்ளது. இதனால் பைக்கில் வந்த சலூன் கடை ஊழியர்களுக்கும். காரில் இருந்த திருவண்ணாமலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர பொறுப்பாளரான ஆர்.கே.அருண்குமாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விசிக நிர்வாகி அருண்குமார் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனையடுத்து, அருண்குமார் தனது கடைக்குள் புகுந்துள்ளார். ஆனாலும் விடாத அவர்கள், சலூன் கடைக்குள் சென்று கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து காரில் தப்பித்து உள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சலூன் கடையின் உரிமையாளர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதன் அடிப்படையில், திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார், சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதையும் படிங்க: RED LIGHT AREA போல் மாறிய அடுக்குமாடி குடியிருப்பு.. ரகசிய சோதனையில் பகீர்!

இதன்படி, அருண்குமாரின் செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சீட்டம்பட்டு என்னும் கிராமத்தில் மறைந்திருப்பதாக தெரிய வந்து உள்ளது. பின்னர், உடனடியாக அங்கு சென்ற தனிப்படை போலீசார், அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளியான நாகராஜ் ஆகியோரை கைது செய்ததுடன், சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த மாரி மற்றும் மணி ஆகியோரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இவர்கள் தப்பிப்பதற்காக பல்வேறு விதங்களில் உதவிய நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி மோதலை ஏற்படுத்த சதி? இந்து முன்னணி பிரமுகர் அதிரடி கைது!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும்,…

7 minutes ago

ஆக்ரோஷமாக துரத்திய யானை… அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோகம்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில்…

24 minutes ago

என்ன கொடுமை இது ஈஸ்வரி.. எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதையே நிறுத்திட்டேன்!

சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…

1 hour ago

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

15 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

16 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

16 hours ago

This website uses cookies.