திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்து முறைப்படி தீபாவளி கொண்டாட்டம் நடத்தப்பட்டதற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 17ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கொண்டாட்டத்தின் பொழுது ஜெய் ஸ்ரீ ராம் என ஆங்காங்கே வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதும், மேடைகளில் ஜெய் ஸ்ரீ ராம் என வாசகம் எழுதப்பட்டிருப்பதும், கோலத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என போடப்பட்டிருந்ததும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், புரோகிதர்களை அழைத்து வந்து மந்திரங்கள் சொல்லி பூஜை செய்து தீபாவளி கொண்டாட்டத்திலும் ஈடுபட்டதும், அதில் கல்லூரி துணை வேந்தர் கலந்து கொண்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திருவாரூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும், ஏபிவிபி மாணவர் அமைப்பை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.