Categories: தமிழகம்

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கிய முகமூடி கும்பல் : லுங்கி அவிழ்ந்த போதும் தாலி செயினை பறித்து ஓட்டம்… அதிகாலையில் நடந்த சம்பவம்!!

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கி தாலி செயினை முகமூடி கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே உள்ள வேலங்குடி தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் சத்திய சுந்தரம் (54). இவரது மனைவி உஷாராணி (47). சத்திய சுந்தரம் நாகூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல் கணவன், மனைவி இருவரும் தங்களது வீட்டில் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை நேரத்தில் மங்கி குல்லா அணிந்த இரண்டு மர்ம நபர்கள் சத்திய சுந்தரத்தின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வீட்டில் உள்ள பீரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்க நகை, பணம் போன்றவை கிடைக்கிறதா..? என்று தேடி பார்த்துள்ளனர். ஏதும் கிடைக்காத காரணத்தினால் தூங்கிக் கொண்டிருந்த உஷாராணியின் கழுத்தில் இருந்த எட்டு பவுன் தாலி செயினை கழற்றுவதற்காக அவர்கள் இருவரும் முயற்சித்துள்ளனர்.

அப்போது, கணவன், மனைவி இருவரும் விழித்து திருடர்கள் இருவரையும் பிடிப்பதற்காக முயற்சி செய்துள்ளனர். திருடர்களில் ஒருவன் சத்திய சுந்தரத்தை கட்டையால் தலையில் தாக்கியுள்ளான். தாலிச் செயினை அறுத்துவிட்டு அவர்கள் தப்ப முயன்ற போது, அவர்களை பிடிப்பதற்கு தம்பதியினர் இருவரும் முயற்சி செய்துள்ளனர். திருடன் ஒருவனின் கைலியை பிடித்து இழுத்துள்ளனர். அவன் கைலியை அங்கேயே கழற்றி விட்டு விட்டு அங்கிருந்து இரண்டு நபர்களும் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தலையில் காயம் பட்ட சத்திய சுந்தரத்தை அக்கம்பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு அவர் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். சத்திய சுந்தரம் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தாலுகா காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வீடு புகுந்து தம்பதியினரை தாக்கி தாலி செயினை பறித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

30 minutes ago

சோடி போட்டு பாப்போமா சோடி- ரீரிலீஸிலும் அஜித்தை முட்டி மோதும் விஜய்? இவ்வளவு கலெக்சனா?

சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…

30 minutes ago

பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!

ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…

1 hour ago

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை…ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை..!!

சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…

2 hours ago

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

17 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

17 hours ago

This website uses cookies.