Categories: தமிழகம்

எச்சி கிளாஸ் கழுவி சம்பாதிக்கிற காசையும் அடிச்சு பிடுங்கிக்கிறாங்க… ஆட்சியரிடம் உதவி கேட்டு கதறி அழும் முதியவர் …!!

ஆண்டவன் ஒரு பொம்பள புள்ளய கொடுக்கலையே சாமி… யாருமே புள்ளைகளை நம்பாதீங்க… இரண்டு மகன்களும் கைவிட்ட நிலையில் ஆட்சியரிடம் உதவி கேட்டு மாற்றுத்திறனாளி முதியவர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட எழிலுர் அருகிலுள்ள நேமம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (59). லட்சுமனனுக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும், பேரக் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், லட்சுமணன் மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வருகை தந்ததும் அலுவலக நுழைவாயில் காத்திருந்த முதியவர் லட்சுமணன் அவரிடம் கண்ணீர் விட்டு அழுதபடி தனது குறைகளை கூறினார். தனக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும், இருவரும் தன்னை கவனிக்காத நிலையில், தான் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியாமல் தவித்து வருவதாகவும், தனக்கு ஏதேனும் உதவி செய்யும்படியும் கேட்டு கதறி அழுதார். இதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, உடனடியாக மாற்றுத்திறனாளி அலுவலரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.

அதனைத் தொடர்ந்துஇ சற்று நேரத்தில் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் உள்ள முட நீக்கவியல் துறை வல்லுனர் முதியவரிடம் வந்து அவரது மருத்துவ அறிக்கைகளை வாங்கி பார்த்தார். தொடர்ந்து, முதியவரை அவர் கை தாங்கலாக மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது நடந்து வரும் போதே முதியவர் அழுது புலம்பியபடியே வந்தார். “இரண்டு மகன்களையும் படிக்க வைத்தேன், அசிங்க அசிங்கமாக என்ன திட்றானுங்க, கொலைகார பாவிங்க, யாருமே பிள்ளைகளை நம்பாதீங்க, பிள்ளைகளை நம்பினால் நடுத்தெருவில் நிக்க வச்சு கையில தட்ட கொடுத்துடுவானுங்க,” என்று புலம்பியபடியே வந்தார்.

ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர், ஆண்டவன் ஒரு பொம்பள புள்ளய கொடுக்கலையே சாமி என்று கூறினார். மாவட்ட ஆட்சியரிடம் பேசும்போதும், தன்னை மகன்கள் கவனிக்கவில்லை என்றும், தனக்கு ஒரு பெண் பிள்ளை இல்லை என்றும் அவர் கூறினார். இதனையடுத்து, அவரிடம் மாற்றுத்திறனாளி அலுவலர் பாதிப்பு அதிகம் இருப்பதால், உங்களுக்கு 2000 ரூபாய் வரை மாத உதவி தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆதார் கார்டு எடுத்துக் கொண்டு நாளை மன்னார்குடியில் நடைபெறவிருக்கும் முகாமுக்கு வருமாறு கூறினார்.

அதற்கு முதியவர் ஆதார் கார்டையும், தனது மகன் வாங்கி வைத்துக் கொண்டதாகவும், தான் டீக்கடையில் எச்சில் கிளாஸ் கழுவி சம்பாதிக்கும் பணத்தையும் பிடுங்கி கொள்வதாகவும், ஆதார் கார்டை கேட்டால் அடித்து துன்புறுத்துவான் என்றும் கூறி புலம்பினார். மேலும் அவர் அருகில் அமர்ந்து இருப்போரிடம் யாரும் பிள்ளைகளை நம்பாதீங்க என்று புலம்பிய வண்ணம் இருந்தார். அவரது மனைவியும் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அவருக்கு வரும் உதவித்தொகையை மூத்த மகனிடம் கொடுத்து அவன் வீட்டில் இருந்து வருவதாகவும், தான் மட்டும் தனியாக குடிசையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு மகன்கள் இருந்த போதும் கவனிக்க ஆள் இன்றி தனித்து விடப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவர், கடைசி காலத்தில் தன்னை கவனிக்க தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கத்திலும், மகன்களால் நிராகரிக்கப்பட்ட துக்கத்திலும் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரைய வைத்தது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக.. பொன்.ரா விளாசல்!

தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…

29 minutes ago

கணவருடன் கவர்ச்சி குத்தாட்டம்… நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்!

வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…

36 minutes ago

மீண்டும் தலைதூக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…

1 hour ago

மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!

ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…

3 hours ago

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

16 hours ago

This website uses cookies.