பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் வாங்கிய பெண் நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் பெருமாளகரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் சுதா என்பவர் மதியழகன் என்பவரிடம் பட்டா மாற்றுவதற்காக 6000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து மதியழகன் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபாலிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் மதியழகன் லஞ்ச பணம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் பொழுது, திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொண்ட குழு சுதாவை லஞ்ச பணத்துடன் கையும் களவுமாக பிடித்தது.
இது குறித்து திருவாரூர் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.