திருவாரூர் ; தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ள மருதூர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் எழில் நகரில் உள்ள அன்னபூர்ணா பைனான்ஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில் நன்னிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து கிளம்பி தோழியுடன் அலுவலகத்திற்கு வந்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு, அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்று உள்ளார். தொடர்ந்து, அர்ச்சனாவின் தோழி மதிய உணவு இடைவேளைக்காக விட்டிற்கு சென்று பார்த்த போது, அர்ச்சனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தொக்கியபடி இருந்துள்ளார்.
இதனையடுத்து, நன்னிலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துடன், அவரது செல்போனை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், நாகப்பட்டிணம் மாவட்டம் வடகாடு பஞ்ச நதிக்குளம் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனாவின் காதலன் சத்யராஜ் (வயது 26) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காவல் துறையினரின் விசாரணையில் சத்யராஜ் கடந்த இரண்டு வருடமாக அர்ச்சனாவை காதலித்து வந்துள்ளார் என்பதும், மேலும் சத்யராஜுக்கு உறவுக்கார பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சத்யராஜ் அர்ச்சனா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அர்ச்சனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 45 நிமிடம் சத்யராஜுடன் அவர் செல்போனில் பேசியுள்ளார். அந்த உரையாடலில் சத்யராஜ், நீ தொலைந்து விடு என்று கூறியதாகவும், மேலும் வீடியோ காலில் வரும்படி வற்புறுத்தி உள்ளார். அதற்கு அர்ச்சனா தொலைந்து போக சொல்லிவிட்டு பிறகு வீடியோ கால் எதற்கு என்றும் கேட்டுள்ளார்.
தொடர்ந்து வீடியோ கால் வந்த சத்யராஜ், அர்ச்சனா தூக்கு போடுவதை பார்த்து ரசித்துள்ளார். மேலும், தூக்கு மாட்டுவதற்கு முன்பு எனக்கு டாட்டா காட்டிவிட்டு மாட்டிக்கொள் என்று ஈவு இறக்கம் இல்லாமல் சத்யராஜ் கூறியதாக காவல்துறையினர் அர்ச்சணாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் சத்யராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.