நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தோல்வி பயத்திலே விவசாய பிரதிநிதிகளை, சில கட்சிகள் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி திருமண விழாவிற்கு வருகை தந்த GK வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வரும் வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தமிழ் மாநில காங்கிரசை பொருத்தவரை தேர்தல் கூட்டணி என்றால், கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் கட்சி கூட்டணி குறித்து ஒத்த கருத்தோடு செயல்படக்கூடிய கட்சிகளுடன் பேசுவதில் எந்த தவறும் கிடையாது.
இண்டியா கூட்டணியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்திய நாடு சட்டத்துக்கு உட்பட்ட நாடு, அனைத்து கட்சிகளும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அலுவலர்களாக இருந்தாலும் சரி, சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்.
விவசாயிகள் போராட்டம் ஒருபுறம் நியாயமாக இருந்தாலும், அவர்களை யாரோ ஒருவர் தூண்டி விடுகிறார்கள். இவ்வளவு காலம் தாழ்த்தி தேர்தல் அறிவிப்புக்கு பத்து நாட்களுக்கு முன்பு குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என சில கட்சிகள் தோல்வி பயத்திலே விவசாய பிரதிநிதிகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது நல்லது அல்ல, எனக் கூறினார்.
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
This website uses cookies.