கரூரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தரமற்ற இலவச தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஏற்கனவே விண்ணப்பம் செய்திருந்த பயனாளிகள் 60 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
கடந்த 2ம் தேதி அன்று கரூருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த போது கொடுக்கப்பட்ட இந்த தையல் இயந்திரங்களை பெற்ற பயனாளிகள், தங்களுக்கு தரமற்ற தையல் இயந்திரங்கள் கொடுத்ததாகக் கூறி, நேற்று முன்தினம் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் அருகிலேயே அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இயந்திரங்களை விட கூடுதல் தரமானதாக கொடுக்கப்படுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கியதில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, புகார் தெரிவித்து கோரிக்கை மனு வழங்கினர். புகார் தெரிவித்த பொதுமக்கள் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இயந்திரங்களை திருப்பி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இரண்டுமே வேறு வேறு துறை என்பதால், தேர்வு செய்யப்பட்ட அந்தந்த பயனாளிகளுக்கு அவர்களுக்கு உரிய பொருட்கள் முறையாக வழங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், தற்போது திராவிட மாடல் ஆட்சியில் அதுவும் முதல்வர் ஆணையால் கரூரில் வழங்கப்பட்ட இந்த தையல் இயந்திரங்களில் கோளாறு மற்றும் பாரபட்சம் காட்டுவதாகவும், இதற்கு பணத்தை பெற்றுக் கொண்டு கூட தரமான பொருட்களை தரலாம் என்றும் பயனாளிகள் முனுமுனுத்து சென்றனர்.
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
This website uses cookies.