தமிழகம்

14 மாதமாக ஆணுக்குச் செல்லும் மகளிர் உரிமைத் தொகை.. கலெக்டர் வரை சென்றாலும் நீதியில்லை!

திண்டுக்கல்லில் தனது மகளிர் உரிமைத் தொகை வேறொரு ஆணுக்கு 14 மாதங்களாக கிடைத்து வருவதாக பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து உள்ளார். இதன்படி, இவரது விண்ணப்பத்திற்கு அனுமதியும் கிடைத்து உள்ளது. ஆனால், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு பணம் வராமல், குறுஞ்செய்தி (SMS) மட்டுமே வந்து உள்ளது.

இதனால், இவருக்கு வர வேண்டிய மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் 60 வயதான கிருஷ்ணன் என்பவருக்குச் சென்று உள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணன் என்பவரிடம் தெரிவித்த போது, அவர் இரண்டு முறை ஆயிரம் ரூபாயை பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்து உள்ளார்.

ஆனால், ‘இது தொடர்பாக நீங்கள் அரசிடம் முறையிடுங்கள்’ எனக் கூறிய கிருஷ்ணன், இதுவரை எங்களுக்கு அந்தப் பணத்தை அனுப்பவில்லை என அப்பெண் கூறுகிறார். அதேநேரம், இது தொடர்பாக, வட்டாசியர் அலுவலகம், பழனி ஆர்டிஓ, மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சிறப்பு முகாம்களில் கூட புகார் அளித்ததாகக் கூறும் அப்பெண், இது தொடர்பாக சென்னைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என அரசு அதிகாரிகள் கூறுவதாகத் தெரிவிக்கிறார். இந்த மனு கொடுப்பதற்காக எடுக்கப்படும் ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றிற்காகவே மாதா மாதம் 300 ரூபாய் வரை செலவாகிறது என்கிறார் அபெண்.

இதையும் படிங்க: தவெகவினரை புரட்டி எடுத்த திமுகவினர்.. போலீசார் கண்முன்னே முட்டிமோதல்!

மேலும், எங்களது வங்கிக் கணக்கின் கடைசி 2 எண்கள் மாறியதாலாயே அவரது வங்கிக் கணக்கிற்குச் செல்வதாக குறிப்பிடும் அப்பெண், இது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

5 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

5 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

6 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

7 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.