தமிழகம்

14 மாதமாக ஆணுக்குச் செல்லும் மகளிர் உரிமைத் தொகை.. கலெக்டர் வரை சென்றாலும் நீதியில்லை!

திண்டுக்கல்லில் தனது மகளிர் உரிமைத் தொகை வேறொரு ஆணுக்கு 14 மாதங்களாக கிடைத்து வருவதாக பெண் ஒருவர் புகார் அளித்து உள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர், தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து உள்ளார். இதன்படி, இவரது விண்ணப்பத்திற்கு அனுமதியும் கிடைத்து உள்ளது. ஆனால், அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு பணம் வராமல், குறுஞ்செய்தி (SMS) மட்டுமே வந்து உள்ளது.

இதனால், இவருக்கு வர வேண்டிய மகளிர் உரிமைத் தொகையான ஆயிரம் ரூபாய் 60 வயதான கிருஷ்ணன் என்பவருக்குச் சென்று உள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணன் என்பவரிடம் தெரிவித்த போது, அவர் இரண்டு முறை ஆயிரம் ரூபாயை பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்து உள்ளார்.

ஆனால், ‘இது தொடர்பாக நீங்கள் அரசிடம் முறையிடுங்கள்’ எனக் கூறிய கிருஷ்ணன், இதுவரை எங்களுக்கு அந்தப் பணத்தை அனுப்பவில்லை என அப்பெண் கூறுகிறார். அதேநேரம், இது தொடர்பாக, வட்டாசியர் அலுவலகம், பழனி ஆர்டிஓ, மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

சிறப்பு முகாம்களில் கூட புகார் அளித்ததாகக் கூறும் அப்பெண், இது தொடர்பாக சென்னைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என அரசு அதிகாரிகள் கூறுவதாகத் தெரிவிக்கிறார். இந்த மனு கொடுப்பதற்காக எடுக்கப்படும் ஜெராக்ஸ் உள்ளிட்டவற்றிற்காகவே மாதா மாதம் 300 ரூபாய் வரை செலவாகிறது என்கிறார் அபெண்.

இதையும் படிங்க: தவெகவினரை புரட்டி எடுத்த திமுகவினர்.. போலீசார் கண்முன்னே முட்டிமோதல்!

மேலும், எங்களது வங்கிக் கணக்கின் கடைசி 2 எண்கள் மாறியதாலாயே அவரது வங்கிக் கணக்கிற்குச் செல்வதாக குறிப்பிடும் அப்பெண், இது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.