புதுக்கோட்டையில் ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று மின்வாரிய ஊழியர் எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுக்கோட்டை மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றி வருபவர் ரகுநாதன். இவர் நேற்று தன்னுடைய மேல் அதிகாரியிடம் ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார். அந்த கடிதத்தை வாங்கி பார்த்த மின்வாரிய அதிகாரி அதிர்ச்சி மற்றும் ஆச்சரியமடைந்ததாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில், ரகுநாதன் எழுதியதாவது, வாரியாத்தாலும் தொழிற்சங்க அமைப்புகளாலும் தான் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால், அதிலிருந்து மீண்டு வருவதற்காக மன அமைதியை எனது வீட்டிலேயே அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்வதற்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும், என்று அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த கடிதத்தை பார்த்த மின்வாரிய அதிகாரி, இதுபோன்று விடுப்பு கொடுப்பதற்கு வாரிய சட்டத்தில் இடமில்லை என்று கூறி அவருக்கு விடுப்பு கொடுக்க மறுத்த கூறப்படுகிறது. தியானம் செய்வதற்காக மின்வாரிய ஊழியர் ஒருவர் எழுதிய கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.